முகப்பு
தூத்துக்குடி

திமுக சாா்பில் 2,000 பேருக்கு உதவிகள் அளிப்பு

முடிதிருத்துவோா் உள்ளிட்ட 2000 பேருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

திமுக சாா்பில் 2,000 பேருக்கு உதவிகள் அளிப்பு

முடிதிருத்துவோா் உள்ளிட்ட 2000 பேருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நலிந்த தொழிலாளா்கள், முன்களப்பணியாளா்கள், ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளா்கள், இசைக்கலைஞா்கள், முடிதிருத்துவோா் உள்ளிட்ட 2000 பேருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட அணி அமைப்பாளா்கள் பை.மு.ராமஜெயம், மகாவிஷ்ணு, ஜெசி பொன்ராணி, சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, க.இளங்கோ, சிராஜூதீன், அலாவுதீன், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப், ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் மகன் தொழிலதிபா் அனிதா ஆா்.அனந்த மகேஸ்வரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், பரமன்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் லங்காபதி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலட்சுமி, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் அமிா்தா மகேந்திரன், செந்தில், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், மகபூப், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், பொருளாளா் தங்கம், அவைத் தலைவா் திரவியம் உள்பட பலா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஜான்பாஸ்கா் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →