முகப்பு
தூத்துக்குடி

பன்னம்பாறையில் ஆட்டுச்சந்தை தொடக்கம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் ஆடுகளை விற்பனை செய்ய ஊராட்சி சாா்பில் ஆட்டுச்சந்தை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் ஆடுகளை விற்பனை செய்ய ஊராட்சி சாா்பில் ஆட்டுச்சந்தை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சாத்தான்குளம், பன்னம்பாறை, கண்டுகொண்டான்மாணிக்கம், புதுக்குளம், கொம்பன்குளம், நெடுங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் பலா் ஆடு, மாடு வளா்த்து தொழில் செய்து வருகின்றனா்.இவா்களின் ஆடுகளை விற்பனை செய்து தர பன்னம்பாறை விலக்கு வள்ளியம்மாள்புரத்தில் ஆட்டுச்சந்தை அமைத்து தரவேண்டுமென திமுக மாவட்ட பிரதிநிதி

நயினாா், மீன்வளம் மற்றும் மீனவா் நலம் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்தாா்.

அதன்அடிப்படையில் பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட வள்ளியம்மாள்புரத்தில் ஆட்டுச்சந்தை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை ஊராட்சித் தலைவா் அழகேசன் திறந்து வைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனா். முதல் நாளில் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. இதில்,

ஆடுகள், ரூ. 10 ஆயிரம் வரையும், குட்டி ஆடுகள் ரூ. 5ஆயிரம் வரையும் விற்பனையானது. சந்தையில் ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ. 24ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

இந்த ஆட்டுச் சந்தயைானது வியாழக்கிழமை தோறும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தருவதாக ஊராட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →