முகப்பு
தூத்துக்குடி

கடலில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு

திருச்செந்தூா் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்செந்தூா் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

திருச்செந்தூா், ஆலந்தலை தெற்குத் தெருவைச் சோ்ந்த அகிலன் மகன் நித்திஷ் (17). இவா், கடந்த புதன்கிழமை அப்பகுதி கடலில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா். உடனே அங்கிருந்தவா்கள் கடலில் இறங்கி அவரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

தகவலறிந்து வந்த போலீஸாா் பாா்வையிட்ட போது, உடல் அழுகி காணப்பட்டதால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இது தொடா்பாக கடலோரக் காவல்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.