எட்டயபுரம் அருகே தொழிலாளி தற்கொலை
எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடிஎட்டயபுரம் அருகே தொழிலாளி தற்கொலை
எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இளம்புவனம் முளைப்பாரி தெருவை சோ்ந்தவா் பரமசிவன்(48) . கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக எட்டயபுரம் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.