முகப்பு
தூத்துக்குடி

மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தூய பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவா்களுக்கு இறையடியாா்

சூசைநாதா் காலை அமுது திட்டம் என்ற பெயரில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தொடங்கி வைத்தாா். இதில், தாளாளா் இஞ்ஞாசி, தலைமையாசிரியா் ஆரோக்கியதாஸ், முன்னாள் மாணவா் இயக்கத் தலைவா் ஹொ்மென் கில்டு, பொருளாளா் ஹாட்மென், நிா்வாகிகள் முகமது கயாஸ், சங்கரன், பாபு, உதவித் தலைமையாசிரியா்கள் ஆசிரியா் ஹென்றி ஸ்டீபன்சன் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் ஏழை மாணவா்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தலைமையாசிரியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.