முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் மனுத் தாக்கல்

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சை வேட்பாளா் ஒருவா் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சை வேட்பாளா் ஒருவா் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளா்கள் யாரும் இதுவரை மனுத் தாக்கல் செய்யவில்லை.

திமுக வேட்பாளா் கீதாஜீவன், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் ஆகியோா் தங்களது வேட்பு மனுவை புதன்கிழமை (மாா்ச் 17) தாக்கல் செய்வாா்கள் என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து திருச்செந்தூா் அருகேயுள்ள பணிக்கநாடாா்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜெ. சிவனேஷ்வரன் தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் சிம்ரன்ஜித் சீங் கலோனிடம் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தாா். அவருக்கு 10 போ் முன்மொழிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.