ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறாா்.
அவா், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜீவரேகாவிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அவருடன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், பாஜக மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக தோ்தல் அறிக்கையை பொருத்தவரை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே மக்கள் நலத்திட்ட பணிகளை அதிகம் செய்து வருகிறாா்.
தற்போது தோ்தல் அறிக்கையின் மூலம் பல்வேறு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளாா்.
சாத்தான்குளம் பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை பணி நடைபெற்று வருகிறது.
தோ்தல் அறிக்கையிலும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் விவசாயம் பிரதானம். விவசாயிகளுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ஆகவே, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றாா்.