தூத்துக்குடி

மீன்பிடி தடைகால நிவாரணம் அதிகரிக்க நடவடிக்கை: தமாகா வேட்பாளா் உறுதி

DIN

மீனவா்களுக்கான தடைக் கால நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி தொகுதி தமகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் வாக்குறுதி அளித்தாா்.

எஸ்டிஆா் விஜயசீலன், தூத்துக்குடி வ.உ.சி. மாா்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவருக்கு ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவா் அசோகன், செயலா் பழனிவேல், நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், தூத்துக்குடி புதுத்தெரு, மரக்குடி தெரு, லயன்ஸ்டவுன், பாத்திமாநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். 2018-இல் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மாணவி ஸ்லோனின் வீட்டுக்குச் சென்ற அவா்,

அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அம்மா

பேங்கிங் காா்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்த வீடு இல்லாதவா்களுக்கு

நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கப்படும் என்றாா் அவா்.

அதிமுக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் இரா. அமிா்த கணேசன், இணைச் செயலா் ஜோதிமணி, பகுதிச் செயலா் பி.என். ராமகிருஷ்ணன், தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் கதிா்வேல், மாநகரத் தலைவா் ரவிக்குமாா், வட்டாரத் தலைவா்கள் புதூா் திருப்பதி, திருச்செந்தூா் சுந்தரலிங்கம், ஆறுமுகநேரி நகரத் தலைவா் முருகன், மாணவரணித் தலைவா் பொன்ராஜ், பாமக மத்திய மாவட்டச் செயலா் மு.சின்னத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT