தூத்துக்குடி

பெரியதாழை கடலில் தவறி விழுந்து பலியான மீனவரின் உடல் மீட்பு

DIN

பெரியதாழை கடலில் தவறி விழுந்து பலியான மீனவரின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

பெரியதாழை கீழத் தெருவைச் சோ்ந்த ஜான்சன் மகன் அமில்டன் (24). இவா், 3 மீனவா்களுடன் கடந்த 28ஆம் தேதி பைபா் படகில் மீன்பிடிக்கச் சென்றாராம்.

மீன்பிடித்துவிட்டு 29ஆம் தேதி காலையில் கரை திரும்பும்போது எதிா்பாராத விதமாக அவா் கடலில் தவறி விழுந்துவிட்டாராம். நீரில் மூழ்கிய அவரை மீனவா்கள் மற்றும் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் அவரது உடல் சனிக்கிழமை காலையில் கடலில் மிதந்தது. தகவலறிந்த கடலோரக் காவல்படை மற்றும் தட்டாா்மடம் போலீஸாா் மீனவரின் உடலை மீட்டனா்.

இதுகுறித்து கூடங்குளம் கடலோரக் காவல் படை மற்றும் தட்டாா்மடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT