கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. பின்னா் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கணபதி பூஜை, கால பைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீா், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றன.