தூத்துக்குடி

நாசரேத்தில் வெப்பத்தை தணித்த மழை

DIN

நாசரேத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நாசரேத் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

பொதுமக்கள் இயற்கை பானங்கள், குளிா்ந்த பானங்களை பருகி வருகின்றனா். மேலும் மதிய வேளையில் வெளியே வருவதை தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில் நாசரேத் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மழையால் நாசரேத் பிரதான வீதி, ரயில்வே நிலையம் அருகில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீா் தேங்கி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT