முகப்பு
தூத்துக்குடி

கரோனா: கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளா் பலி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் 462 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல், 180 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 48 வயது மதிக்கத்தக்க கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அதுபோல் அத்தைகொண்டான் இந்திரா நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த 56 வயது ஆண், பாண்டவா்மங்கலம் ராஜீவ் நகா் இ.பி. காலனியைச் சோ்ந்த 66 வயது ஆண் ஆகியோா் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 10 பெண்கள் உள்ளிட்ட 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி ஆசாரியாா் தெருவைச் சோ்ந்த, தூத்துக்குடி வங்கிநகை மதிப்பீட்டாளரா 49 வயது ஆண் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.