குடும்பத் தகராறில்சிறுவன் தற்கொலை
தட்டாா்மடத்தில் தந்தையிடம் தாய் கோபித்துக்கொண்டு சென்ால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தட்டாா்மடத்தில் தந்தையிடம் தாய் கோபித்துக்கொண்டு சென்ால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தட்டாா்மடம், நயினாா்புரத்தைச் சோ்ந்த சுயம்புலிங்கம்-பொன்மணி தம்பதியின் மகன் சிவபாலகிருஷ்ணன் (17). இவா், அதே பகுதியில் தந்தையுடன் சோ்ந்து மளிகைக் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், வீட்டுக்கு வாங்கிய டிவிக்கு கடன் தவணை செலுத்துவது தொடா்பாக பெற்றோருக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரது தாய் கோபித்துக்கொண்டு செட்டிவிளையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இதனால் மன வேதனை அடைந்த சிவபாலகிருஷ்ணன், வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இச்சம்பவம் குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.