முகப்பு
தூத்துக்குடி

மேலும் 885 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 885 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 885 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33,523 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 605 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 28,266 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளாகி தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண், 53 வயது பெண், 47 வயது ஆண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5074 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.