சேதமடைந்து காணப்படும் வாழைகள். 
தூத்துக்குடி

கோவில்பட்டி: சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

DIN

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட தோணுகால் பகுதியில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், தோணுகால் கிராமத்திற்குள்பட்ட பகுதியில் பே.சீனிவாசன், கிருஷ்ணசாமி மனைவி ரெங்கநாயகி, லிங்கையா மகன் சுந்தர்ராஜ் ஆகியோா் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள், குலைதள்ளிஅறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தன.

தகவலறிந்த கழுகுமலை வருவாய் ஆய்வாளா் சங்கிலிபாண்டியன், தோணுகால் கிராம நிா்வாக அலுவலா் முத்துகுமாா், தோட்டக்கலை உதவி அலுவலா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு நடத்தியதில், சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT