தூத்துக்குடி

மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கைதான கணவா் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

DIN

குளத்தூா் அருகே மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த மனைவியை எரித்துக் கொன்ாக கைது செய்யப்பட்ட கணவா் உள்பட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

குளத்தூா் அருகே தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மனைவி முருகலெட்சுமி (36) என்பவா் ஏப்ரல் 23ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இது தொடா்பாக தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், முருகலெட்சுமி கணவருக்கு தெரியாமல் தனது மகள் காதலித்த இளைஞரையே அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி , அவரது சகோதரா்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகியோருடன் சோ்ந்து முருகலட்சுமியை தீயிட்டு எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தருவைகுளம் போலீஸாா் இந்த நான்கு பேரை கைது செய்தனா்.

இதையடுத்து இந்த நான்குபேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையின் பேரில், முனியசாமி, சங்கா், நீலமேகம், சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகிய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து தருவைகுளம் போலீஸாா் 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT