தூத்துக்குடி

இடைசெவலில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு கனிமொழி அஞ்சலி

DIN

இடைசெவலில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு திமுக எம்பி கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் கி.ராஜநாராயணன்(99). இவர் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இறந்த எழுத்தாளர் கி.ரா உடலுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடலை கி.ராவின் மகன்களான திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணிக்கு இடைசெவல் கிராமத்திற்கு வந்தடைந்தது. அதையடுத்து அவரது உடல் அவரது வீட்டு வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், மாவட்ட  ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, முன்னாள் எம்.எல்.ஏ., எல்.ராதாகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

இவரது இறுதிச் சடங்கு இடைசெவலில் உள்ள அவரது தோட்டத்தில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT