முகப்பு
தூத்துக்குடி

ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

கரோனா நிவாரண பணிகளுக்காக கே.ஆா் நூற்பாலை சாா்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கரோனா நிவாரண பணிகளுக்காக கே.ஆா் நூற்பாலை சாா்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி கே.ஆா் நூற்பாலை சாா்பில் நூற்பாலையின் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.அருணாச்சலம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வியாழக்கிழமை தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோரிடம் வழங்கினாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உடனிருந்தாா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் சாா்பில் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு

ரூ. 25,000 க்கான காசோலையை அமைச்சா் அனிதாஆா். ராதாகிருஷ்ணனிடம் ஜமாத் நிா்வாகிகள் வழங்கினா்.

அப்போது, திமுக ஆழ்வை ஒன்றியச் செயலா் நவீன்குமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், திமுக நகரச் செயலா்கள் பாலம் ராஜன், வால்சுடலை, ஜமாத் நிா்வாகிகள் அலாவுதீன், சேக்முகைதீன், நசீா், ரசீது, ஜவாஹிா், முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.