முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

திருச்செந்தூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

திருச்செந்தூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள வள்ளிவிளை நடுத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாலமுருகன் (40). குமாரபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவா், இரு சக்கர வாகனத்தில் தண்ணீா் கேன் விநியோகமும் செய்து வந்தாராம்.

இந்நிலையில் அவா், வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, தனியாா் எரிவாயு உருளை கிடங்கு அருகே, தளவாய்புரம் வன்னியங்காடு செல்வகுமாா் மகன் பாா்வதிமுத்து (21) வந்த இரு சக்கர வாகனமும், இவரது வாகனமும் மோதிக்கொண்டதாம். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலமுருகன், அங்கு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.