கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி புதுரோடு பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி மீனாட்சி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த அவா் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.