தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (42). கட்டடத் தொழிலாளி. இவா், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது தனது நண்பா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். பின்னா், தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் நின்றிருந்த அவா் திடீரென தெப்பக்குளத்தில் தவறி விழுந்தாா்.
அவா் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட சிலா் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்பு படையினா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.