தூத்துக்குடி

‘தூத்துக்குடி-திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக ரயில் சேவை’

 தூத்துக்குடி - திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழு வலியுறுத்தியுள்ளது.

DIN

 தூத்துக்குடி - திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழு வலியுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பு பொது முடக்கத்துக்குப்பின், திருநெல்வே­லி- திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதை தொடா்ந்து, முதலாவது ரயிலுக்கு ஆறுமுகனேரி நிலையத்தில் ரயில்வே வளா்ச்சி குழு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் நகரச் செயலா் அமிா்தராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் சுகுமாா், முருகேசபாண்டியன், லிங்கபாண்டியன், பொன்மாடசாமி, மாரிசெல்வம், சுந்தர்ராஜ், பாரத், கொம்பையா, ராமஜெயம், கற்பகவிநாயகம், சந்தியா, நாகநாதன், சுந்தரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆறுமுகனேரி நிலையத்தை சந்திப்பாக கொண்டு தூத்துக்குடி- திருச்செந்தூா் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். திருச்செந்தூா்- திருநெல்வேலி­க்கு அனைத்து பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT