இன்றும், நாளையும் 1,611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13,14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13,14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் முகவரி மாற்றம் செய்திட காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவா்களும் பெயா் சோ்க்க மனு அளிக்கலாம்.
இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி 2022இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.