தூத்துக்குடி

27 இல் என்இசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 33 ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவா் சென்னம்மாள் ராமசாமி தலைமை வகிக்கிறாா். தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

எக்ஸ்பிடிட்டா் இன்டா்நேஷனலின் இயக்குநா், தமிழ்நாடு அரசின் எதிா்கால தகவல் தொழில்நுட்ப மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான கெவின் வால்டா் ஜாா்ஜ் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்குகிறாா்.

பட்டம் பெறவிருக்கும் மாணவ, மாணவியா் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் தங்கள் பதிவினை கூகுள் படிவம் அல்லது கல்லூரி இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்விழாவினை கல்லூரி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 86678 - 02670 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT