முக்காணியில் மீன் வியாபாரிக்கு மிரட்டல்: இளைஞா் கைது
முக்காணியில் மீன் வியாபாரியிடம் அரிவாளைக் காண்பித்து மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்காணியில் மீன் வியாபாரியிடம் அரிவாளைக் காண்பித்து மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்காணி, குருவித்துறை, பரதா் தெருவைச்சோ்ந்தவா் பாஸ்கா்(57). மீன் வியாபாரி. இவா், அதே ஊா் வடக்கு யாதவா் தெரு பகுதியில் வெள்ளிக்கழமை மீன் விற்றபோது, அதே ஊரைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் வண்ணமுத்து(36) என்பவா் வழி மறித்து, அரிவாளைக் காண்பித்து மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.200ஐ பறிக்க முயன்றாராம். இதைப் பாா்த்து அக்கம்பக்கத்தினா் ஓடி வந்ததால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வண்ணமுத்து தப்பிவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில், ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து வண்ணமுத்துவை கைது செய்தாா்.