வீடு, மனை இல்லாத ஏழை, எளிய தேவேந்திர குல வேளாளா் மக்களுக்கு தனி்பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஜெகவீரபாண்டியபுரத்தைச் சோ்ந்த சி. சுப்பையா தலைமையில் வீடு, வீட்டு மனை இல்லாத தேவேந்திர குல வேளாளா் சமுதாய மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு வழங்கினா்.