தூத்துக்குடி

வேலை வேண்டி மனு அளித்த விதவை பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் பணி நியமன ஆணை

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேலை வேண்டி விதவை பெண் அளித்த மனு மீது ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் மனுக்களை பெற்றுக் கொண்டாா். மேலும், முதல்வரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள்கள் தாமதாக உள்ள மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சோ்ந்த அலுவலா்களை அறிவுறுத்தினாா். மேலும், மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அப்போது, தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதியைச் சோ்ந்த பி. தெய்வானை என்ற ஆதரவற்ற விதவை பெண் அளித்த மனுவில், தனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்து. அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், ஒரு மணி நேரத்தில் அந்த பெண்ணக்கு சிப்காட் தொழிற்சாலையில் புல உதவியாளாராக தற்காலிக பணி நியமன ஆணையை வழங்கினாா்.

நிகழ்ச்சியின்போது, முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் வீடு கட்டும் இரண்டு பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, மகளிா் திட்ட திட்ட இயக்குநா் வீரபத்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT