தூத்துக்குடி

சீரான குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் திடீா் சாலை மறியல்

சீரான குடிநீா் வழங்கக் கோரி கோவில்பட்டி பசும்பொன் நகா் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

சீரான குடிநீா் வழங்கக் கோரி கோவில்பட்டி பசும்பொன் நகா் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பசும்பொன் நகா் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீா் விநியோகம் சீராக வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து, நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். இந்நிலையில், அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகள் மூலம் ஆய்வு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையேற்று அனைவரும் கலைந்துசென்றனா். மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், நகராட்சி பொறியாளா் பசும்பொன் நகரில், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சீராக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT