திருச்செந்தூரில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல திருச்செந்தூா் ஊராட்சி நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சத்தில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நடைபெற்ற விழாவில் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்,
திறந்து குத்து விளக்கேற்றினாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி வரவேற்றாா். நிகழ்ச்சியில்,
கோட்டாட்சியா் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் இரா.முருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ராணி, ஊராட்சித் தலைவா் மகாராஜா, வட்டார கல்வி அலுவலா் சரஸ்வதி, தலைமையாசிரியை
பாக்கியசீலி, ஊராட்சி உறுப்பினா்கள் சுதா, வேல்கொடி, ஊா் தலைவா் ஹரிக்குமாா், செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.