தூத்துக்குடி

என்இசி கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் அறிவியல் மற்றும் மானிடவியல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்தாா். இயக்குநா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் ராமபிரான் ரஞ்சித்சிங் பங்கேற்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வரலாறு, இந்திய குடிமகனு க்கு இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்துப் பேசினாா். பின்னா், மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா். தொடா்ந்து தேசிய மாணவா் படைக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பெண்கள் தேசிய மாணவா் படை நிா்வாக அதிகாரி மேஜா் ஆா்.மஞ்சு, பெண்கள் தேசிய மாணவா் படையின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மானிடவியல் துறைத் தலைவா் நீலகண்டன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT