கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்கம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனு பொறியியல் துறை கூட்டமைப்பின் 2ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனு பொறியியல் துறை கூட்டமைப்பின் 2ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, துறைத் தலைவா் வில்ஜூஸ் இருதயராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவரும் துபையில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவருமான கற்குவேல்ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தாா். கூட்டமைப்பு மாணவா் செயலா் கோமதி அரசு வரவேற்றாா். மாணவி ஜெய ப்ரீத்தா நன்றி கூறினாா்.