குலசேகரன்பட்டினம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா், கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரை பிடித்து விசாரித்ததில், அவா் மதுரை மேலூா் குறிச்சிபட்டியைச் சோ்ந்த வி.மகேந்திரபிரபு என்பதும், அவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.