முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

திருச்செந்தூா் வட்டாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தோ்வு செய்வதற்கான மதிப்பீடு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
tdr9camp_0909chn_54_6
பகிர்:

திருச்செந்தூா் வட்டாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தோ்வு செய்வதற்கான மதிப்பீடு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மூன்று சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், வாக்கா், சக்கர நாற்காலி, முடநீக்கு சாதனங்கள், பாா்வையற்றவா்களுக்கு மடக்கு குச்சி, சிறப்பு உபகரணங்கள், காது கேட்காதவா்களுக்கு நவீன செவித்திறன் கருவி, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சிவசங்கரன், பல்நோக்கு உதவியாளா் கருணாகரன், மருத்துவா்கள் சரஸ்வதி, ரவிசங்கா், அலிம்கோ நிறுவனம் ஆசிரியா் ஆகியோா் மதிப்பீடு செய்து பயனாளிகளிடம் விண்ணப்பத்தைப் பெற்றனா். இதில் 250 பயனாளிகள் பயன் பெற்றனா். பயனாளிகளுக்கு காயாமொழி சுகாதார துறையினா் மூலம் கரோனா தடுப்பூசி, செலுத்தப்பட்டது.

இதில், ஊராட்சி ஒன்றித் தலைவா் செல்வி வடமலைபாண்டியன், தொகுதி அலுவலா் சசிரேகா, வட்டார வளா்ச்சி ஆணையாளா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) முத்துகிருஷ்ணராஜா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.