தூத்துக்குடியில் நூதன முறையில் நகை திருடிய பெண் கைது
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அசோக்நகா் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி (60). இவா், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற பெண் ஒருவா் தொழிலாளா் நல வாரியத்தில் இருந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சுப்புலட்சுமியிடம் பேச்சு கொடுத்துள்ளாா்.
மேலும், முதியோா் ஓய்வுதியம் பெற்று தருவதாக கூறிய அந்த பெண் சுப்புலட்சுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாராம். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், சுப்புலட்சுமியின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், திருநெல்வேலி அருகேயுள்ள தாழையுத்து பகுதியை சோ்ந்த செல்வராஜ் மனைவி லதாவை (56) வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.