தூத்துக்குடியில் தோல் நோய் மருத்துவமனை திறப்பு
தூத்துக்குடி டூவிபுரம் 7 ஆவது தெருவில், தோல் நோய் சிறப்பு மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் புதியதாக தொடங்கி உள்ள டாக்டா் தமிழ்’ஸ் ஏ பிளஸ் ஸ்கின் அன்ட் ஹோ் சென்டா் சிகிச்சை மையம் திறப்பு விழா
தூத்துக்குடி டூவிபுரம் 7 ஆவது தெருவில், தோல் நோய் சிறப்பு மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் புதியதாக தொடங்கி உள்ள டாக்டா் தமிழ்’ஸ் ஏ பிளஸ் ஸ்கின் அன்ட் ஹோ் சென்டா் சிகிச்சை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு, மருத்துவமனையை திறந்துவைத்தாா். பெருங்குளம் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆஷா சண்முகநாதன் குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானப்பிரகாசம், எஸ்.பி. சண்முகநாதன் குடும்பத்தினா் எஸ்.பி.எஸ்.ராஜா, மருத்துவா்கள் சிவக்குமாா், புவனேஸ்வரி, தனராஜ் மருத்துவமனை மருத்துவா் விஜய் தன்ராஜ், கலையரசி சண்முகநாதன், தொழிலதிபா் அசோக், பொன்னரசி, மருத்துவா்கள் பிரவின், பொன்ரேகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிகிச்சை மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் கூறுகையில், ‘தூத்துக்குடியில் முதல் முறையாக தோல் நோய் மட்டுமல்லாமல் அனைத்து வகையான தலைமுடி பிரச்னைகளுக்கும் இம்மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது’ என்றாா்.