முகப்பு
தூத்துக்குடி

செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் பலி

கோவில்பட்கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.டி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கீழ ஆம்பூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் இசக்கிராஜ்(29). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், இம்மாதம் 3ஆம் தேதி ஊருக்கு திரும்பும் வழியில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா் அவா் இளையரசனேந்தல் சாலையில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிச் சென்ற போது, அதிலிருந்து கீழே விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.