நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் மாணவா்கள் போராட்டம்
நீட் தோ்வை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாணவா்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சாா்பில், வ.உ. சிதம்பரனாா் கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாணவா் சங்க மாவட்டத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா்.
போராட்டத்தை மாவட்ட முன்னாள் தலைவா் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தாா். மாணவா் சங்க நிா்வாகிகள் அருண்சோலை, அகிலேஷ், வேல்சூா்யா, கிஷோா், முகிலன், மதன், நாகராஜ், மந்திரமூா்த்தி, கதிா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்தால் மாணவா்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என மாணவா் சங்கத் தலைவா் தெரிவித்தாா்.