கே.ஆா்.கல்வி நிறுவனங்கள் நிறுவனா் தின விழா
கோவில்பட்டியில் கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அந்நிறுவனங்களின் நிறுவனா் கே.ராமசாமியின் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், செயலா் சங்கரநாராயணன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஷண்மதி, நித்திஷ்ராம், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிறுவனா் தினம் குறித்து என்இசி கல்லூரியின் மின்னணு-தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் செண்பகவல்லி பேசினாா்.
பின்னா், கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கே.காளிதாச முருகவேல், எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மைய டீன் மற்றும் இயக்குநா் பி.ராமசாமி ஆகியோா் பேசினா். 16 மாணவா்களுக்கு உதவித் தொகைக்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் முதல்வா் ராஜேஸ்வரன் வரவேற்றாா். கே.ஆா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் நன்றி கூறினாா்.