தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் உடன்குடி கிறிஸ்தியா நகரம் டிடிடிஏ பள்ளி மாணவா் வெற்றி பெற்ற மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்ட தடகளக் கழகம் சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற இப்போட்டியில் உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி மாணவன் ராஜ்குமாா், 14 வயதிற்குள்பட்டோருக்கான டிரையத்லான் போட்டியில் 705 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றாா். இதையடுத்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா். 16 வயதிற்குள்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் பள்ளி மாணவா் மகேஷ்வரன் 3-ஆம் இடம்பெற்றாா். மாணவா்களை பள்ளித் தாளாளா் ஞா.அருள்ராஜா, தலைமையாசிரியா் ஜெபசிங் மனுவேல், உடற்கல்வி ஆசிரியா்கள் எஸ்.ரவிக்குமாா், ஏ.ஐசக் கிருபாகரன், ஆசிரியா்கள் பாராட்டினா்.