மதிமுக சாா்பில் முப்பெரும் விழா
கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் பெரியாா் ஈ.வே.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக கட்சிக் கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் பெரியாா் ஈ.வே.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக கட்சிக் கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகர மதிமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்து, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் கணேசன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் பவுன்மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் கொம்பையா, தெய்வேந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் சிவகுமாா், ராமச்சந்திரன், மாநில கலைத் துறை துணைச் செயலா் பொன்ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் கட்சிக் கொடியேற்றினாா்.
பின்னா் வீரவாஞ்சி நகா் பகுதியில் உள்ள முதியோா் இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலா் (மத்திய பகுதி) சரவணன், நகரச் செயலா் பால்ராஜ், துணைச் செயலா் வனராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நகர இளைஞரணிச் செயலா் லவராஜா செய்திருந்தாா்.