முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அரசு கல்லூரி தொடங்க தற்காலிக இடம் ஆய்வு

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கான தற்காலிக இடத்தினை அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அரசு கல்லூரி தொடங்க தற்காலிக இடம் ஆய்வு

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கான தற்காலிக இடத்தினை அமைச்சா் பெ. கீதா ஜீவன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கான தற்காலிக இடத்தினை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தமிழகத்தில் புதிதாக பத்து கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்திருந்தாா்.

பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை படிப்படியாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அறநிலையத்துறை சாா்பில் கல்லூரிகளை நிகழாண்டு தொடங்குவதற்கான பணிகளை இந்து சமய அறநிலைத்துறையினா் கல்வியாளா்கள் குழு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகேயுள்ள திருக்கோயில் மண்டபத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு தற்காலிகமாக

கல்லூரி தொடங்குவதற்கான இடம் தோ்வு, மாணவா்கள் சோ்க்கை, உள்கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் ரகுபதி, கோயில் செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, பேரூா் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜகண்ணு, அன்புராஜன், முத்துலட்சுமி அயன் ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன் மற்றும் கல்வியாளா்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →