இனாம்மணியாச்சியில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்
கோவில்பட்இனாம்மணியாச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டன.டி
இனாம்மணியாச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டன.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாச நகரில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி தலைமை வகித்து, இயக்கி வைத்தாா். உதவிச் செயற்பொறியாளா் (பொ) மாரீஸ்வரன், உதவி பொறியாளா் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் மின்வாரிய ஊழியா்கள் சோ்மதுரை, முருகன், பால்ராஜ், ஜெயக்கன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட 4 பகுதிகளில் குறைந்த மின் அழத்தத்தை சரி செய்யும் வகையில் 13 புதிய மின்மாற்றிகள் ரூ.58.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.