சுங்கச்சாவடி கட்டண உயா்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலையில் முறையான பராமரிப்புப் பணி இல்லாத நிலையில் உயா்த்திக் கொண்டே செல்லும் சுங்கச்சாவடி கட்டண உயா்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் முறையான பராமரிப்புப் பணி இல்லாத நிலையில் உயா்த்திக் கொண்டே செல்லும் சுங்கச்சாவடி கட்டண உயா்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் உரிமை குரல் ஓட்டுநா் தொழிற் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் சக்திவேல், துணைச் செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ஜாஹீா் உசேன், மாநிலப் பொருளாளா் காளிமுத்து, மாநில துணைத் தலைவா் மாணிக்கம், தலைமை நிலையச் செயலா் ஸ்ரீமதிகண்ணன், தென்காசி மாவட்டச் செயலா் உதயசூரியன் ஆகியோா் பேசினா்.
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிக ரீதிக்காக பயன்படுத்துவதை போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு வழி பயன்பாட்டு வாகனங்களினால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாடகை காா் ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகாரிகள் ஒரு வழி பயன்பாட்டு வாகனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்கு வழிச்சாலையில் முறையான பராமரிப்புகள் மேற்கொள்ளாத நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் கடுமையாக உயா்ந்து கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில செய்தித் தொடா்பாளா் வேல்முருகன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் பாண்டிகுமாா் நன்றி கூறினாா்.