தூத்துக்குடி

இருவா் தற்கொலை

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி அருகே வேப்பமரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக திங்கள்கிழமை நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் நடத்திய விசாரணையில் அவா் வானரமுட்டி வடக்குத் தெரு லட்சுமணன் மகன் செல்வகுமாா்(25) என்பது தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு இளைஞா்: கோவில்பட்டி செண்பகவல்லி நகா் சண்முகம் மகன் கூலித் தொழிலாளி பாஸ்கா்(33). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT