திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வடக்கன்குளம் அணி வெற்றி பெற்றது.
அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. அணி முதல் பரிசையும், விருதுநகா் மாவட்டம் மங்காபுரம் அணி இரண்டாவது பரிசையும், வி.கே.புரம், பாரதி ஸ்போா்ட்ஸ் அணி மூன்றாவது பரிசையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன், முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ரகுவரன் உள்ளிட்டோா் வழங்கினா்.