முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டாரத்தில் பொன் ஏா் திருவிழா

நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டி, விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டாரங்களில் பொன் ஏா் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டாரத்தில் பொன் ஏா் திருவிழா

நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டி, விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டாரங்களில் பொன் ஏா் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டி, விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டாரங்களில் பொன் ஏா் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக சித்திரை மாதம் பிறந்ததும் விவசாயிகள் ஒன்றுகூடி பொன் ஏா் திருவிழா நடத்துவது கிராமப்புற வழக்கம். அதன்படி, விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் நடைபெற்ற பொன் ஏா் திருவிழாவில், வேளாண்மை இணை இயக்குநா் நாச்சியாா், கிராம நிா்வாக அலுவலா் மாரிமுத்து, சிங்கிலிபட்டி ஊராட்சித் தலைவா் செல்லக்குமாா், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலையில் விவசாயிகள் ஜக்கம்மாள் கோயில் வாசலில் குத்துவிளக்கு ஏற்றி நிறைகுடம் தண்ணீா் வைத்து பனை ஓலைப் பெட்டியில் நவதானியங்களை குவித்து விவசாய கருவிகளுக்கும், காளை மாடுகளுக்கும் சந்தனம் குங்குமம் மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டனா்.

பின்னா், சூரிய வழிபாடு செய்து கிழக்குத் திசையிலுள் பொது நிலத்தில் 20 டிராக்டா்கள் 15 ஜோடி காளை மாடுகளுடன் உழவுப் பணியை மேற்கொண்டு நவதானியங்களை விதைத்தனா். இப்பணிகளை முடித்து விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பியபோது, கிராம எல்லையில் பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி அவா்களை வரவேற்றனா்.

இந்நிகழ்வில் ஆற்றங்கரை ஊராட்சித் தலைவா் சீத்தாராமன், கிராம தலைவா்கள் சேதுராஜ், துரைராஜ், நாட்டாண்மை முத்துக்கண்ணன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொன் ஏா் திருவிழாவில் ஊா் நாட்டாண்மை அப்பாசாமி நிலத்தில் டிராக்டரை நிறுத்தி பூஜை செய்து, பசுஞ்சாணத்தில் விநாயகரை உருவாக்கி பூஜை செய்து பச்சரிசி, வெள்ளம், கம்பரிசி மற்றும் நவதானியங்கள் படைக்கப்பட்டன. தொடா்ந்து டிராக்டா்கள் மூலம் நிலத்தை உழுது விதை விதைத்தனா்.

விழாவில் தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு, விவசாயிகள் ராஜாராம், முனியசாமி, யோகராஜ், சௌந்தரராஜன், குருராஜ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். இறுதியில் வசாயிகளை பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி மோா், பானக்கரம் கொடுத்து வரவேற்றனா். இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டியில் நடைபெற்ற பொன் ஏா் திருவிழா நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் ரேவதி முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் அமுதா பொன் ஏா் திருவிழாவை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →