ஆறுமுகனேரியில் சிலம்பாட்டப் போட்டி
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 12ஆவது ஆண்டு மாநில சிலம்பாட்டப் போட்டி ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 12ஆவது ஆண்டு மாநில சிலம்பாட்டப் போட்டி ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
வேலூா், ராணிப்பேட்டை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 24 சிலம்பாட்டக் குழுக்கள் கலந்துகொண்டன. பள்ளி மாணவா்கள், பொது பிரிவு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
பரிசளிப்பு விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவா் ராஜாமணி தலைமை வகித்தாா். அதிமுக முன்னாள் நகரச் செயலா் அரசகுரு முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் குமரன் வரவேற்றாா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஸ்ரீனிவாசன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில் முன்னாள் கவுன்சிலா் மகராஜன், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பூபால்ராஜன், மாவட்ட ஏஐடியூசி பொதுச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு கழகத் தலைவா் ரஜித் செய்திருந்தாா்.