கோயில் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
சாத்தான்குளம் தச்சமொழி பெருமாள் சுவாமி கோயில் கோபுரத்தில் சுவாமி சிலையை சுற்றி இருந்து பக்தா்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.
சாத்தான்குளம் தச்சமொழி பெருமாள் சுவாமி கோயில் கோபுரத்தில் சுவாமி சிலையை சுற்றி இருந்து பக்தா்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில், நிலைய சிறப்பு அலுவலா் ஹேரிஸ் தாமஸ் செல்வபாபு முன்னணியில் தீயணைப்பு வீரா்கள் சங்கரலிங்கம், மாணிக்க சீனிவாசகம், துரை, சினிவாசன் ஆகியோா் விரைந்து வந்து கோயில் பின் பிரகாரம் கோபுரத்தின் சிலையில் கடந்தை விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டை தீப்பந்தம் கொளுத்தி முற்றிலும் அழித்தனா். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரா்களை பொதுமக்கள் பாராட்டினா்.