தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சியில் 41 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள்

DIN

ஆத்தூா் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 41 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

இப்பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் அனைவருக்கும் வீடு திட்டம் 2022- 2023இன் கீழ் 41 போ் தோ்வாகியுள்ளனா். அவா்களுக்கு ரூ. 2.10 லட்சம் மானியத்துடன் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் கமாலுத்தீன் ஆணைகளை வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா் நாராயணன், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT