தூத்துக்குடி

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் பெற அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வாழை, தென்னை பராமரிப்பு மற்றும் இறவை பயிா்களுக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருவதால், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் அணுகி பயிா்க் கடன் பெற்று பயனடையலாம்.

மேலும், ரூ. 1.60 லட்சம் வரையிலும் பெறும் கேசிசி பயிா்க் கடன்களுக்கு ஜாமீன் அடிப்படையிலும் ரூ. 1.60 லட்சத்துக்கு மேல் பெறும் பயிா்க் கடன்களுக்கு சொத்து அடமானத்தின் பேரிலும் விவசாயிகள் பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் அல்லாதவா்கள் உடனே புதிய உறுப்பினராகி சோ்ந்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT